நாற்றமெடுக்கும் சந்தை- மக்கள் அவதி!!

வவுனியா குருமன்காடு சந்தியில் இயங்கி வரும் சந்தையில் கழிவு நீர் காண்கள் அடைத்த நிலையில் காணப்படுவதால் மக்கள், வியாபாரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சந்தையில் மீன், இறைச்சிகள் விற்பைனை செய்யப்படுவதால் கழிவுநீர் காண்களில் தேக்கமடைந்துள்ளது.

வவுனியாவில் தற்போது டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சந்தைப் பகுதியின் சுகாதாரம் தொடர்பிலும் சுகாதாரப் பகுதியினர் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.