குடைசாய்ந்தது லொறி – இருவர் மருத்துவமனையில்

திருகோணமலையில் மண் ஏற்றிச்சென்ற டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை நடந்தது.

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் காயங்களுக்குள்ளாகி மூதூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.