யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்
நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500 தாதியர்களில் 40 பேர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்களில் 9 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 30 பேர் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணத்தில் நிலவும் தாதியபற்றாக்குறையை நீக்குவதற்காக தென்பகுதியைச் சேர்ந்தவர்களை வடக்கில் கடமையாற்றுவதற்கு அரசாங்கம் நியமித்தமையானது வரவேற்கத்தக்க விடயமாகும். தற்போது போதனா வைத்தியசாலையில் 451 தாதியர்கள் கடமையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.