உழவியந்திரங்களில் சிக்குண்டு- இருவர் படுகாயம்!!

பிரேக் இல்லாத உழவியந்திரம் மணலுடன் பின்னோக்கி நகர்ந்ததில் அதில் சிக்குண்ட இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது.

அதேவேளை மணல் பறித்து விட்டு வந்த உழவியந்திரம் பிரேக் இல்லாததால் எதிரே வந்த குடும்பத்தலைவரை மோதி அவர் மீது ஏறியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று நடந்துள்ளது.

இரு சம்பவங்களும் கிளிநொச்சி பன்னங்கண்டியில் நடந்துள்ளன. குறித்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.