தொழில்நுட்பவியல் கல்லூரி-மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பதிவாளரின் முறையற்ற செயற்பாட்டைக் கண்டித்து மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எமது கல்லூரியில் மாணவர்கள் ,விரிவுரையாளர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியயோர் மீது பதிவாளர் முறையற்ற விதத்தில் பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.பதிவாளரின் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளில் ஏற்படும் தவறுகளை அவரின் மேல் அதிகாரிக்கு முறைப்பாடுகளாக வழங்கும் போது .முறைப்பாடு மேற்கொண்டவர் மீது தனது பொலிஸ் செல்வாக்கைப் பயன்படுத்தி முறையற்ற விதத்தில் நடந்து கொள்கின்றார். இவ்வாறான நடவடிக்கைகளை பதிவாளர் மேற்கொள்ளுவதால் எமது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. “ என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

இரண்டு மணித்தியாலங்கள் வரை போராட்டம் நடைபெற்றது.

“கல்வி சார்ந்த ,கல்வி சாரதா அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்து,பதிவாளரின் ஊழல் மோசடி க்கு நடவடிக்கை எப்போது,பதிவாளரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு நடவடிக்கை எப்போது”போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.