52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட- மனித எலும்புக் கூடுகள்!!

மன்னாரில் சதொச வளாக விற்பனை நிலையத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து அங்கு மனித எச்சங்கள் எலும்பு கூடுகள் நோக்கிய அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரைக்கும் 52 பெட்டிகளில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள், மண்டையோடுகள் அடைக்கப்பட்டு பாதுகாப்புக்கருதி மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறையொன்றில் வைக்கப்பட்டுள்ளன.

அகழ்வு பணி தொடர்ந்தும் எதி்ர்வரும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.