பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்ட முதியவர்- படுகாயம்!!

தலவாக்கலையிலிருந்து ஹற்றன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன்பகுதி சில்லில் சிக்கி 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலையிலிருந்து ஹற்றன் பேருந்துத் தரிப்பு நிலையத்து இன்று மாலை வருகை தந்த பேருந்தில் அவர் சிக்குண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொகவந்தலாவ லொய்னோன் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்தார்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.