வவுனியாவில் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு

வவுனியாவில் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 6 வயதான சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஷர்மிளரூபன் யக்ஷிதா என்ற 6வயது சிறுமி கடந்த 18ஆம் திகதி திடீரென்று மயக்கமுற்ற நிலையில் அவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி பிறந்த சில நாட்களில் அவசியத் தேவை கருதி சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதன் பின்னர் வழமைக்குத்திரும்பியதுடன் உடல் ஆரோக்கியமாகவே காணப்பட்டுள்ளார். திடீரென்று மயக்கமுற்ற நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனினும் மூளையில் கிருமித்தாக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

வவுனியாவில் இவ்வாறு சிறுவயதில் சிறுமிகள் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு சகோதர சிறுமிகள் அண்மையில் குருமன்காட்டு பகுதியில் நோய்த்தாக்கம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.