மட்டக்களப்பில் மீட்கப்பட்ட- 3 சடலங்கள்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும், ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.