பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து இந்தி யாவுக்கு உடனடியாக வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. வானூர்தி நிலையம் தற் போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது. வானூர்திச் சேவைகள் ஆரம் பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய வானூர்தி நிலை யமாக பலாலியை தரமுயர்த்தும் கட்டுமானப் பணி கள் முன்னெடுக்கப்படும். இந்தப் பணிகளுக்காக மேலதிக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படாது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இந் திய அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையி லான முத்தரப்புச் சந்திப்பில் மேற்படி முடிவு நேற்று எட்டப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத் துக்கு வருகை தந்திருந்தார். இந்திய நிதி உத வியில் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவு
வண்டிச் சேவையை தொடக்கி வைப்பதற்காக இலங்கைக் கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
இரண்டு தரப்பின ரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுச் சந்தித்தனர். ‘ஜெட்விங்’ விடுதியில் நேற்று மதிய உணவுடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரம் உயர்த்துவதற்கு முதல்கட்டமாக, தற்போது இருக்கின்ற நிலையி லேயே இந்தியாவுக்கு வானூர்தி சேவைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவையைத் தொடங்குவதற்கு உடனடியாக என்ன தேவைகள் உள்ளனவோ அவை பூர்த்தி செய்யப்படும்.
‘பன்னாட்டு வானூர்திகள் தரையிறங்குவதற்கும், இங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்கும் ஏதுவாக சமிஞ்சைக் குறியீடுகள் (நவிக்கேசன்) அமைக்கப்படவேண்டும். குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆயத் திணைக்களம் என்பனவற்றைச் செயற்படுத்துவதக்கு இப்போதுள்ள கட்டிடங்கள் போதுமா என்பதை ஆராயவேண்டும். இல்லாவிடின் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்’ என்று சிவில் வானூர்திப் போக்குவரத்துச் சபையினர் சந்திப்பில் கூறியுள்ளனர். அவற்றை உடனடியாச் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக வருகை தந்து, பலாலி வானூர்தி நிலையத்தைப் பார்வையிட்டு இந்தியாவுக்கான வானூர்திச் சேவைக்கான ஏனைய அடிப்படைத் தேவைகளை மதிப்பிடுவார்கள். வானூர்திச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பிராந்திய வானூர்தி நிலையமாகத் தரமுயர்த்தி ஏனைய நாடுகளுக்கான வானூர்திச் சேவைகளும் நடத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள வானூர்தி ஓடுதளத்துக்கு மேற்குப்புறமாக 500 ஏக்கர் காணியில் புதிய பிராந்திய வானூர்தி நிலையத்துக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வு மாதாந்தம் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோரும், இந்தியத் தரப்பில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங், இரண்டாம் நிலைத் தூதுவர், யாழ்ப்பாணத்திலுள்ள தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் பாலசந்திரன், தூதரக அதிகாரிகளும், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி, வான்படைத் தளபதி, சிவில் வானூர்திப் போக்குவரத்துச் சபை பணிப்பாளர் நிமல் சிறி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.