அதிகாலை புதுக்குடியிருப்பு-கொழும்பு பேரூந்து விபத்து (படங்கள்)

இன்று அதிகாலை புதுக்குடியிருப்பு கொழும்பு வழி முல்லைத்தீவு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று இரவு மதவாச்சி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது இதில் பயணித்த 20 பேர் வரை காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணம் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்தவர்களுடன் 5 படையினரும் அடங்கு கின்றார்கள். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  விபத்து குறித்து மதவாச்சி பொலீஸார்கள் விபரங்களை திரட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.