குழந்தைகளை தவறாக பயன்படுத்தும் பெண்ணொருவரின் செயல்!!

சிறுவர்களுக்கு பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சமூகம் அங்கீகரிக்கிறது. ஆனால் கெட்ட முன்மாதிரியை அமைக்கும் பெரியவர்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

ஏற்கனவே ஒருவயது குழந்தைக்கு பியர் கொடுத்த தந்தை தொடர்பாக பரவலாக பேசப்பட்டதுடன், குறித்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேபோன்று மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடவத்தையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

பெண்ணொருவர் மதுபான கடையில் வாங்கிய மதுபான போத்தல்களை தூக்கிக் கொண்டு வருமாறு குழந்தையிடம் கொடுக்கிறார்.

இந்த பெண்ணைப் போன்ற பெரியவர்களின் பொறுப்பற்ற செயல்களில் இருந்து மாதிரிகள் பெறும் குழந்தைகள் அழிவுக்குக் கொண்டு செல்வது ஒருபோதும் தடுக்க முடியாது.

இன்று கொண்டு செல்லப்படும் மதுபான போத்தல்கள் நாளை தொண்டைக்குள் போவதற்கு யார் பொறுப்பு

இவ்வாறான பொறுப்பற்ற விதத்தில் நடக்கும் பெரியவர்கள் தங்களின் குழந்கைளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.