வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தில் இருந்து இன்று காலை 9.55 மணி அளவில் இலங்கைக்கு வருகை தந்த KU 363 விமானத்திலேயே குறித்த பெண் வருகை தந்துள்ளார்.

5.185 கிலோ எடையுள்ள சுமார் 30,693,955 மதிப்பு மிக்க தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களையே குறித்த பெண்ணிடம் இருந்து சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.