பொன்னாலை கடலுக்குள் பாய்ந்த பஸ்!

காரைநகரிலிருந்து யாழ்பாணத்துக்கு பயணித்த அரச பேருந்து, பொன்னாலைப் பாலத்தில விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்தது.இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றது.பேருந்தில் 4 பயணிகள் மட்டும் பயணித்தனர். தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தலைச்சுற்று காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.கடலுக்குள் பாய்ந்த பேருந்து நீர்க்குழாய் கட்டுடன் மோதி நின்றது.