மொனராகலையில் சம்பவம்; அடுத்த மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியல்
மொனராகலை மாவட்டத்தில் உயர் தரத் தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை வீடியோ படமாக எடுத்து, முகப்புத்தகத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் இரு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் 32, 33 வயதுகளை உடைய இந்த இரு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களை எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நேற்று மொனராகலை நீதிவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அது தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
சந்தேகநபர்களில் ஒருவர் அரச பாடசாலை ஆசிரியர். மற்றையவர் தனியார் வகுப்பு ஆசிரியர்.
பாடசாலையில் வரலாறு கற்பிக்கும் குறித்த பாடசாலை ஆசிரியர் முதலில் குறித்த மாணவியை தனது வீட்டு க்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
தனது மனைவி பிள்ளைகளை பொலன்னறுவை பகுதியில் உள்ள அவர்களது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மிகத் திட்டமிட்டு குறித்த மாணவியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அவர் அம்மாணவியை, மொனராகலையின் ஒரு கனிஷ்ட பாடசாலை அருகே உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை வீடியோவாக படமாக்கி முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந் நிலையிலேயே மொனராகலை மாவ ட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் கிடைக்கப் பெற்ற தகவல், முறைப்பாட்டுக்கு அமை வாக உடன் நடவடிக்கை எடுத்து ஆசிரிய ர்கள் இருவரையும் கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளனர்.