மாண­வியை துஷ்­பி­ர­யோகம் செய்து வீடியோ எடுத்து முகப்புத்­த­கத்தில் பதி­வேற்­றிய இரு ஆசி­ரி­யர்கள் கைது- (வீடியோ)

மொன­ரா­க­லையில் சம்­பவம்; அடுத்த மாதம் 7 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றியல்

மொனரா­கலை மாவட்­டத்தில் உயர் தரத் தில் கல்வி பயிலும் பாட­சாலை மாணவி ஒரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்தி அதனை வீடியோ பட­மாக எடுத்து, முகப்­புத்­த­கத்தில் பதி­வேற்­றிய குற்­றச்­சாட்டில் இரு ஆசி­ரி­யர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மொன­ரா­கலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் 32, 33 வய­து­களை உடைய இந்த இரு ஆசி­ரி­யர்­களும் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்­களை எதிர்­வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நேற்று மொன­ரா­கலை நீதிவான் உத்­த­ர­விட்­ட­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

மொன­ரா­கலை பொலிஸ் அத்­தி­யட்சகர் சுஜித் வெத­முல்­லவின் ஆலோ­ச­னையின் பேரில் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

சந்­தேகநபர்­களில் ஒருவர் அரச பாட­சாலை ஆசி­ரியர். மற்­றை­யவர் தனியார் வகுப்பு ஆசி­ரியர்.

பாட­சா­லையில் வர­லாறு கற்­பிக்கும் குறித்த பாட­சாலை ஆசி­ரியர் முதலில் குறித்த மாண­வியை தனது வீட்­டு க்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார்.

தனது மனைவி பிள்­ளை­களை பொலன்­ன­றுவை பகு­தியில் உள்ள அவர்­க­ளது தாய் வீட்­டுக்கு அனுப்பி வைத்­து­விட்டு மிகத் திட்­ட­மிட்டு குறித்த மாண­வியை ஏமாற்றி வீட்­டுக்கு அழைத்துச் சென்று இவ்­வாறு பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார்.

அவர் அம்­மா­ண­வியை, மொனரா­க­லையின் ஒரு கனிஷ்ட பாட­சாலை அருகே உள்ள விடுதி ஒன்­றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்து அதனை வீடி­யோ­வாக பட­மாக்கி முகப்­புத்­த­கத்தில் பதி­வேற்­றி­யுள்ளார்.

இந் நிலை­யி­லேயே மொன­ரா­கலை மாவ ட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் கிடைக்கப் பெற்ற தகவல், முறைப்பாட்டுக்கு அமை வாக உடன் நடவடிக்கை எடுத்து ஆசிரிய ர்கள் இருவரையும் கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளனர்.