யாழில் சற்றுமுன் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக பலி.. ஒருவர் கவலைக்கிடம் (படங்கள்)

யாழ்ப்பாணம் – அரியாலை, நெலுக்குளம் புகையிரத கடவையில் ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.



குறித்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பூம்புகார், நாவற்குழி மற்றும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்கள் தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை.

மேலும், புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு போடப்பட்டு இருந்த போதும், அங்கு பாதுகாப்பு வேலி இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.




இதன் காரணமாக சமிக்ஞை விளக்கு போடப்பட்டு இருந்த போதும், பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.





இதன்போது வந்த கடுகதி புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.