பண்ணைப் பாலத்தில் அதிகரிக்கும் தூண்டில் மீன்பிடி!!

யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதிகளையும் இணைக்கும் பண்ணைப் பாலத்தின் இருமருங்கிலும் தூண்டில் மீன்பிடியாளர்கள் அதிகமாகத் தொழில் செய்து வருகின்றனர்.

பண்ணைப்பாலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு கடல் நீரோட்டமானது செல்வதால் இங்கு தூண்டில் மீன்பிடியாளர்களுக்கு மீன்கள் பிடிப்பது இலகுவாகவுள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு வருகை தரும் மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான மீன்களை தூண்டில் மூலம் பிடிக்கின்றனர்.