நிறுத்தாமல் பயணித்த யாழ்தேவி- மக்கள் குழப்பம்!!

கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி தொடருந்து தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்றதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ்தேவி தொடருந்து வவுனியாவில் உள்ள தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் நிறுத்தாமல் ஓமந்தை வரையும் சென்றுள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் பயணிப்பதற்காக பயணசீட்டு எடுத்து நீண்டநேரம் காத்திருந்த மக்கள் குழப்பமடைந்தனர்.

ஓமந்தை வரையும் சென்ற தொடருந்து அதேபாதை வழியாக பின்புறமாக மீண்டும் வந்து தாண்டிக்குளம் நிலையத்தை அடைந்து அங்கு காத்திருந்த பயணிகளை ஏற்றிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.