கிளிநொச்சியில் 5 நாட்களாக காணாமல் போன இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

கிளிநொச்சியில் சிறு குளம் ஒன்றில் இருந்து இளைஞனின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் தர்மபுரம் பொலிஸாரால் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 23 ம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிஸார் மற்றும் கிளிநொச்சி குற்ற தடயவியல் பொலிசார் இணைந்து மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.