மின்கம்பத்தை மோதிய- மின்சார சபை வாகனம்!!

இலங்கை மின்சார சபையினரின் திருத்தப்பணி வாகனம், மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார் என்று ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மீராகேணி, மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு விபத்து நடந்துள்ளது.

விபத்தில் வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது. மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததினால் வீதியருகிலிருந்த கடைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.