மட்டுவிலில் டிப்பர் வாகனம் விபத்து……

மட்டுவில் பகுதியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் அருகில் இருந்த கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.
இச் சம்பவம் இன்று காலை 6:15 மணியளவில் புத்தூர் வீதி மட்டுவில் கமலாசனி வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள வெல்டிங் கடையுடன் மோதியது.
இவ் விபத்து டிப்பர் வாகனத்தின் சாரதியின் தூக்கம் காரணமாகவே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.இச் சாம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்து வருகின்றனர்.