2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மூதூரில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்டதாக கூறப்படும் 17 பொது மக்களின் நினைவு தினம் திருகோணமலையில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
பிரான்ஸை தலைநகராக கொண்ட எக்ஷன் பேய்ம் தொண்டு நிறுவனத்தின் பணியாளர்களே இதன் போது உயிரிழந்தவர்களாவர்.
இந்த கொலைத் தொடர்பான குற்றவாளிகள் எவரும் இது வரையில் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.