துப்பாக்கி முனையில் மனைவி செய்த செயல்… துடிதுடித்த கணவன்! இப்படியொரு பொண்டாட்டியா?

கொல்கத்தாவில் 20 வயது கணவனின் காதுகளை, துப்பாக்கி முனையில் மனைவி துண்டித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் நர்கல்டங்க பகுதியை சேர்ந்த முகமது தன்வீர் ( 20) என்ற இளைஞர் தன்னைவிட வயதில் மூத்த மும்தாஸ் (40) என்பவரை 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

திருமணம் நடைபெற்றதிலிருந்தே மும்தாஸ், தன்வீரை கொடுமைபடுத்தி வந்துள்ளார். அடிதாங்க முடியாத தன்வீர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்படி தப்பித்து ஓடினாலும் குண்டர்கள் மூலம் மீண்டும் தன்வீரை வீட்டிற்கு தூக்கி வந்துள்ளார்.

ஊரிலிருக்கும் தாயை கூட பார்க்க அனுமதிக்காமல் மும்தாஸ் கொடுமை படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தன்வீர் முல்லிக்பூரிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை குண்டர்கள் மூலம் தூக்கி வந்த மும்தாஸ், தனது சகோதரியுடன் இணைந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் துப்பாக்கி முனையில் அவரது இரு காதுகளையும் அறுத்து வீசியுள்ளனர்.

இதற்கிடையில் வீட்டிலிருந்து தப்பிய தன்வீர் உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த உறவினர்கள் காவல்துறையிலும் புகார் கொடுத்தனர்.

தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.