இலங்கை 11 மணிநேரத்தில் 3099 பேர் அதிரடியாக கைது!

இலங்கையில் ஒரே நாளில் 3099 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர விசேட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதானவர்களில் 700 பேர் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நேற்று இரவு ஒன்பது மணி முதல் இன்று காலை 8 மணிவரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.