குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பிறக்கும் பொற்காலம்… அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசிக்காரர்கள்

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது.

விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பல வருடங்களாகவே கண்ணீர், துயரம், வேதனைகளை அனுபவித்து வரும் தனுசு ராசிக்காரர்களுக்கு துயரங்கள் தீரும் காலம் வந்து விட்டது.

ஜென்ம குரு வரப்போகிறதே என்று கவலைப்பட வேண்டாம். ஜென்ம குரு வரும் போது புத்தியில் தடுமாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான்.

காரணம் ராமருக்கு ஜென்மத்தில் குரு இருந்த போதுதான் ராமர் பட்டம் துறந்து வனவாசம் சென்றதும் சீதையை பிரிந்து தவித்ததும் நடந்தது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் குரு அமர்வது தீது செய்யாது காரணம் குருவின் வீடு தனுசு ராசி. சொந்த வீட்டில் குரு அமரும் போது நன்மைகளை மட்டுமே செய்வார்.

குரு பகவான் உங்களுக்கு கை கொடுக்க வந்து விட்டார். ஜென்ம சனி, ஜென்ம கேது, களத்திர ராகு என பிரச்சினைகளை அனுபவிப்பவர்களுக்கு குரு நன்மை செய்வார். மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்களை தடுத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பார்.

கடவுளே இல்லை என்று வெறுத்துப்போனவர்களுக்கு கூட குருபகவான் கடவுள் பற்றிய நம்பிக்கையை தருவார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

பொன்னவன் குருவால் பொற்காலம்
குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்கிறார். சொந்த வீடான தனுசு ராசியில் குரு அமர்வது பொற்காலமாக இருக்கப்போகிறது. ஜென்ம குரு சீரைக்குலைக்கும் என்பார்களே. குரு தனது வீடான தனுசு மீனம் ராசிகளில் அமரும் காலத்தில் ந்த கெடுதலும் செய்யமாட்டார்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. எல்லையில்லாத வெற்றிகளைத் தருவார். பொன்னவன் குரு ராசியில் அமரும் போது மேன்மைகள் நடைபெறும்.

சந்தோஷமான காலம்
குரு பகவானால் மறக்க முடியாத காலமாக அமையப்போகிறது. வெயிலின் அருமை நிழலில் தெரியும். ஏழரை சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகளைத் தருவார். வேலையில் பலருக்கு பிரச்சினை ஏற்பட்டது.

குடும்ப வாழ்க்கையில் திண்டாட்டம் ஏற்பட்டது. சிக்கல்களுக்கு விடிவுகாலம் எப்போது வரும் என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு மிகப்பெரிய சந்தேஷம் வரப்போகிறது.

ஊதிய உயர்வு கிடைக்கும்
குரு பகவான் ஓயாமல் உழைக்க வைப்பார். உழைக்க தயங்காதீர்கள். நல்ல வேலை கிடைக்கும். ஊதிய உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வேலைகளில் வேலை செய்யும் இடங்களில் இருந்த இருந்த பிரச்சினைகள் தீரும்.

வீடு, மனை சொத்து சுகங்களிலும் வேதனைதான் ஏற்பட்டது. வேதனைகள் முடியும் காலம் வந்து விட்டது. வியாபாரம் விருத்தியாகும். பதவி பட்டங்கள் தேடி வரும். நோய்கள் தீரும் எதிரிகள் தொல்லைகள் தீரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

முயற்சிகளில் வெற்றி
கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.

குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.

பிள்ளைகள் பிறக்கும்
இது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரக்கூடிய குருப்பெயர்ச்சி அமையப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்வையிடுகிறார். கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். உயர்கல்வியை படிக்க ஆர்வம் அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.

விடிவுகாலம் பிறக்கும்
குரு எந்த பிரச்சினைகளையும் தனியாக சந்தித்து சாதிப்பீர்கள். சங்கடங்களை தீர்த்து பலத்தை அதிகரிப்பார். பிரச்சினைகளை தீர்க்க நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். மன காயங்களுக்கும், உடல் காயங்களுக்கும் மருந்தாக அமையும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தை குரு பார்வையிடுகிறார்.

குரு பார்வையால் குடும்பம் குதூகலமடையும். குருவின் பார்வை படும் இடங்கள் எல்லாம் சுப பலன்கள் கிடைக்கும்.

தன்னம்பிக்கை தரும் குரு
பாக்ய வீட்டின் மீது குரு பார்வை விழுகிறது. 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி.

அன்பும் ஆதரவும் கிடைக்கும். நான்கு ஆண்டுகளில் பட்ட பாட்டிற்கு பலனாக தைரியம், தன்னம்பிக்கை தரக்கூடிய குருவாக உங்கள் ஜென்ம ராசிக்கு குருஅமர்கிறார். புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்யலாம்.