பிக்பாஸில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் இயக்குனர் சேரன் எலிமினேட் செய்யப்பட்டு அவர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அது வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தெரியாது. இந்நிலையில் இன்று சேரன் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூன்று பேருக்கு கேள்வி கேட்டு கடிதம் எழுத வேண்டும் என பிக்பாஸ் கூறினார்.
அந்த கடிதத்தை வைத்தே அவர் சீக்ரெட் ரூமில் தான் இருக்கிறார் என வனிதா உள்ளிட்ட போட்டியாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
நேற்று நடந்த நாமினேஷன் பார்த்துவிட்டு கேள்வி கேட்பதாக சேரன் கேள்வியில் குறிப்பிட்டிருந்தார். ‘அது இன்னும் டிவியில் வந்திருக்காதே, எப்படி பார்த்தார். அப்போ சீக்ரெட் ரூமில் தான் இருக்கிறார்” என வனிதா கண்டுபிடித்துவிட்டார்.