இறுதிநாளில் ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்… இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது லொஸ்லியாவா..?

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு தான் மக்கள் மத்தியில் அதிகளவு உள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் முழுவதும் ட்க்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் நேரடியாக கடைசி வாரத்திற்கு சென்று விடலாம்.

இதனால், போட்டியாளர்கள் அனைவரும் இந்த டாஸ்கில் வெற்றிபெற கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

அதில், கவினுக்கு வழக்கம் போல அதிக வாக்குகள் பதிவாகி அவர் முன்னிலையில் இருக்கிறார்.

சேரனும், இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியேறுவது செரினா.. லொஸ்லியாவா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி நாள் வாக்குபதிவில் லொஸ்லியாவிற்கு தான் வாக்குகள் மிகவும் குறைவாக விழுந்துள்ளன.

எனவே, நியாயபடி லாஸ்லியாதான் வெளியேற வேண்டும். இருப்பினும் பிக் பாஸ் என்ன திட்டம் வைத்திருக்கிறார் நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.