இன்றைய எபிஷோடில் சாக்க்ஷி லாஸ்லியாவிடம் நடந்துகொண்ட விதம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இந்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில், இந்த சீசன் போட்டியாளர்களான நாமினேஷனில் வெளியேறியவர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில், காதல் பிரச்சனைகளை ஏற்படுத்திய சாக்‌ஷியும் விருந்தினராக வந்திருந்தார்.

அப்போது, லொஸ்லியாவிற்கும், சாக்‌ஷிக்கும் இன்று மிகப்பெரிய சண்டை ஏற்படும் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அப்படி எதுவும் நடக்காமல், லொஸ்லியாவும், சாக்‌ஷியும் சிரித்து பேசிக்கொண்டதோடு, கட்டி தழுவிக்கொண்டனர்.

இதற்கிடையில், கவினையும், லொஸ்லியாவையும் கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார் சாக்‌ஷி. அதில் கவினை பொண்ணுங்கள டிரஸ் மாத்தற மாதிரி மாத்திட்டு போவியா கவின் என்றும் மோசமாக விமர்சித்திருந்தார்.

இது ஒருபுறமிருக்க, ரசிகர் ஒருவர் உன்னிடம் இருந்து கவின் தப்பித்து விட்டார் என்று கூறியிருந்தார். அதற்கு சாக்க்ஷி, உன்னை போன்று ஆட்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இருப்பினும் அந்த ரசிகர், லாஸ்லியா இறுதி போட்டிக்கு போய்ட்டார்னு எரியுதா? கவலை படாதே லாஸ்லியா கவினுக்கு தான் என்று கமன்ட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த சாக்க்ஷி , நான் எப்போதும் ஷெரின், முகென், சேரனுக்கு தான் ஆதரவாக இருந்து வந்தேன். நான் எப்போதும் மாற வில்லை. எனக்கு ஏன் எரியுது? அந்த விஷமிகளிடம் இருந்து வெளியேறிதை நினைத்து நான் சந்தோச படுகிறேன், இவர்கள் இருவர் தான் இதற்கு சரியானார்கள் என்று பதில் அளித்திருந்தார்.

இப்படி இருந்த சாக்‌ஷி இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவிடம் கட்டி அணைத்தபடி மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், சாக்க்ஷியும் நமக்குள் இருக்கும் பிரச்சனை தீர்ந்து என்னை மன்னித்து விடு என்று கூறியுள்ளார். இதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பெரும் ஷாக்காக அமைந்துள்ளது.