இன்றைய ராசிபலன் 2 நவம்பர் 2019

பஞ்சாங்கம்

நாள் சனிக்கிழமை
திதி சஷ்டி
நட்சத்திரம் பூராடம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் பகல் 1.30 முதல் 3 வரை
நல்லநேரம் காலை 7.45 முதல் 8.45 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம் ரோகிணி
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்

 மேஷராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவி னர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் இனம் தெரியாத உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷபராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உறவினகள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதுடன், லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அரசாங்கக் காரி யங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப் படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடகராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர்ப் பயணம் தவிர்க்க வும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர் கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறிய அளவில் பிரச்னை ஏற்படக்கூடும். விற்பனை வழக்கம்போல் இருக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னிராசி அன்பர்களே!

தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். மனதில் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். மாலையில் குடும்பத்தினருடன் நண்பர் அல்லது உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் ஏற்படும் நெருக்கடியை சமயோசிதமாகச் சமாளித்து, சக ஊழியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்களில் தடை, தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் பக்குவமாகப் பேசி காரியம் சாதித்துக்கொள்ள முயற்சி செய்யவும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் செலவுகளுடன் உற்சாகம் ஏற்படும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமார்தான். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசுராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் கையிருப்பு கரையும். சிலர் கடன் வாங்கவும் நேரிடும்.. மாலையில் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று வருவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகரராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். அதிகாரிகளால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். ஆனாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். உறவினர் களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கூடி வரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.