குருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும் உங்களைத் தேடி வருமாம்…!! எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா..?

இதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.

கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப் பல போராட்டங்களை சந்திந்துவந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.

இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். 2ம் இடத்தில் வருகைதரும் குருபகவான் குடும்ப சுகஸ்தானத்தில் வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகப்போகிறது. பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேருவர். உங்கள் பேச்சிக்கு அனைவரும் கட்டுப்பட்டு மரியாதை அளிப்பர்.

புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனையில் யோகம் உண்டாகும். வீடு கட்டுதல், இடம் வாங்குதல், பிளாட் வாங்குதல் போன்றவை சிறப்பாக அமையும்.

திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் காலகட்டமிது.தொழில் ஸ்தானத்தில் இருந்த மந்தநிலை மாறும். போட்டிகளை சாதுரியமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். முற்றுப்பெறாமல் நீடித்துக்கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகிவிடுவார்கள்.

மனத் தடுமாற்றங்கள் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.தவணை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும், சோதனையும் தீர்ந்து வாழ்க்கையில் உயர்வைக் காணப்போகிறீர்கள்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். கடந்த ஆறு வருடமாக எதையெல்லாம் இழந்தீர்களோ அதையெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியில் பெறப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்கள் முயற்சிகளைச் சற்று தீவிரப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வியாபாரிகளுக்கு:கூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்துகொள்ளுங்கள் மற்றபடி போட்டியாளர்களின் தொல்லைகள் இருக்காது. அதோடு தொழில் ரகசியங்களையும் நீங்கள் அறிய வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் குருப்பெயர்ச்சியினால் கொடுக்கல், வாங்கலில் படிப்படியான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு:முயற்சிகளின் அளவுகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். விளைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். அதேநேரம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். மாற்றுப் பயிர்களை ஊடு பயிராகப் பயிரிடவும். புதிய குத்தகைகளை இந்தக் காலங்களில் எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு:இந்தக் குருப்பெயர்ச்சியில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். அதோடு புதிய பொறுப்புகளையும் கொடுத்து உங்கள் திறமையைச் சோதிக்கும் அதனால் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி நற்பெயரைச் சம்பாதிக்கவும்.

கலைத்துறையினருக்கு:புதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்தபின்னரே செயல்படுத்தவும். உங்களின் சொற்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். மேலும், வேலையில் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கவும். கலைப்பயணங்களைச் செய்து நல்ல வருமானத்தையும் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு:சிலநேரங்களில் மனக்குழப்பங்களும், கவலைகளும் உண்டாகலாம். அதேசமயம் உடனுக்குடன் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.

மாணவமணிகளுக்கு:படிப்பில் முழுமையாக ஈடுபடவும். உங்கள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உடனுக்குடன் பலனளிக்கும்.பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானைத் தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.