சனி பகவனால் ஏற்படும் கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமா?.. தினமும் இந்த மந்திரத்தை கூறுங்கள்..!

ஒரு மனிதனுக்கு வாழ்வில் கஷ்டம் என்பது வரவில்லை என்றால், வாழ்க்கை என்றால் என்ன என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியாது.

அந்த சமயத்தில் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை பற்றி புரிய வைக்க சனிபகவானால் மட்டுமே முடியும். தொடர்ச்சியாக வெற்றியை கண்டு விட்டால் எவ்வளவு நல்ல மனிதராக இருந்தாலும், அவர்களுடைய மனதில் சிறிய அளவு கர்வமானது ஏற்பட்டுவிடுகிறது. இதனால் தான் கடவுள் எப்பொழுதும் மனிதனுக்கு தோல்விகள் கலந்த வெற்றியை தருகின்றார்.

இப்படி சனிபகவான் நன்மையையும் அளிப்பார் சில தீங்குகளை விளைவிப்பார். அப்படி சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உங்களுக்கான சிவஸ்தோத்திரம் இதோ…

சிவஸ்தோத்திரம்
  • விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய
  • கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய காலாந்தகாய புஜகாதிப கங்கணாய கங்காதராய கஜராஜ விமர்தனாய தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
  • பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய உக்ரராய துர்க பவஸாகர தாரணாய ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
  • சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய
  • பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய ஆனந்த பூமிவரதாய தமோமயாய தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
  • பானுப்ரியாய பவஸாகர தாரணாய காலாந்தகாய கமலாஸன பூஜிதாய நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
  • ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
  • முக்தேச்வராய பலதாய கணேச்வராய கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

சனிபகவானால் உங்களுக்கு பணப்பிரச்சனை அதிகமாகும் சமயத்தில், இந்த ஸ்தோத்திரத்தை ஒருமுறை உச்சரித்துவிட்டு முழு உளுந்தை சனிபகவானுக்கு நெய்வேத்தியமாக படைத்து, அந்த உளுந்தினை தானமாக கொடுத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் சனி பகவானின் தாக்கமானது குறையும்.