உங்களது ராசிப்படி சக்திவாய்ந்த குணம் என்ன தெரியுமா? இவங்க மட்டும் முதுகில குத்தவே மாட்டாங்களாம்

பிறக்கும் போது நாம் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறோம். ஆனால் நாம் வளரும்போது ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமானவராக மாறுகிறோம். நம்முடைய ஆளுமை என்பது நம்முடைய வளர்ப்பு மற்றும் நாம் வாழும் சூழ்நிலை பொறுத்தது மட்டுமல்ல. நம்முடைய ஆளுமை என்ன நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கப்போகிறோம் என்பதை முடிவு செய்வதில் நமது பிறந்த ராசிக்கும் முக்கியப்பங்கு உள்ளது.

நமது பிறந்த ராசி நமது ஆளுமையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நமது ராசி நமக்குள் ஒளிந்திருக்கும் மிகச்சிறந்த குணம் மற்றும் பலம் பற்றியும் கூற இயலும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிகச்சிறந்த குணம் என்னவென்று பார்க்கலாம்.

மேஷம்
அனைத்திலும் நல்லதைக் கண்டுபிடிக்கும் திறமை மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கும். இவர்கள் தூய்மையான மற்றும் யாருக்கும் கெட்டது நினைக்காத ஆன்மாக்கள், இந்த உலகம் மிகவும் அழகானது என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். அவர்கள் நீங்கள் செல்ல வேண்டிய நபர்கள், நீங்கள் வருத்தமாக இருக்கும்போது, அவர்கள் உங்களை சுற்றி மகிழ்ச்சியான, நேர்மறையான சூழலை உருவாக்குவார்கள். இவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள் ஒருபோதும் முதுகில் குத்தமாட்டார்கள்.

ரிஷபம்
நீங்கள் சோகமாகவோ அல்லது தோல்வியிலோ இருக்கும்போது உங்களுக்கு தோள்கொடுத்து ஆதரவாக இருந்தது யார் என்று சிந்தித்து பாருங்கள், அவர்கள் கண்டிப்பாக ரிஷப ராசிக்காரர்களாக இருப்பார்கள். வியர்களின் மிகச்சிறந்த குணம் இரக்கமாகும். சிலசமயம் இவர்கள் இழிந்தவர்களாக தோன்றலாம் அதற்கு காரணம் இவர்களின் சொந்த பாதுகாப்பின்மை உணர்வாக இருக்கலாம். ஆனால் தனிநபராக இருக்கும்போது இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கானவராக இருப்பார்கள். மற்றவர்களுக்காக உதவ இவர்கள் எப்பழித்தும் தயாராக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் அறிவு மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், ஆனால் அதுதான் அவர்களின் பலமாகும். அவர்கள் புத்திசாலித்தனமான ஆத்மாக்கள், அவர்கள் உலகில் உள்ள எல்லாவற்றையும் பற்றி ஒரு கருத்தைக் கொண்டிருப்பார்கள், அது பெரும்பாலும் சரியானதாகவும் இருக்கும். புத்திசாலித்தனத்தைத் தவிர இவர்கள் உலகம் முழுவதும் சுற்றி அனுபவத்தை விரும்புவார்கள். இவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறினால் அதனை அப்படியே பின்பற்றுங்கள் ஏனெனில் இது உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்கள், அதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். மற்ற ராசிக்காரர்களுக்கும், கடக ராசிக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்றவவர்கள் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டும் உதவ முயற்சிக்கும் போது இவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உற்சாகத்துடன் உதவுவார்கள். இவர்கள் அந்நியர்களையும் தங்கள் நண்பர்களாக மாற்ற முயலுவார்கள். அனைவரின் புன்னகைக்கும் காரணமாக தாங்கள் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் மிகச்சிறந்த குணம் மனவலிமை ஆகும். இவர்கள் வெளியுலகத்திற்கு அமைதியானவர்களாக தெரிந்தாலும் மனதிற்குள் இவர்கள் உணர்ச்சிகளின் குவியலாக இருப்பார்கள். இவர்களை சிலசமயம் சைக்கோ என்று அழைக்கலாம் ஆனால் இவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் வைத்திருப்பார்கள். இவர்களின் கட்டுப்பாடான உணர்ச்சிகள்தான் இவர்களை மனதளவில் வலிமையானவர்களாக மாற்றுகிறது.

கன்னி
அனைத்து ராசிகளுக்கும் தாய் என்றே கன்னி ராசிக்காரர்களைக் கூறலாம், ஏனெனில் மற்றவர்கள் மீது அனுப்பு செலுத்துவதில் இருந்து செடி வளர்ப்பதாக இருந்தால் கூட இவர்கள் அதனை அன்புடன் செய்வார்கள். இவர்கள் அன்பான உள்ளுணர்வு மிகுந்த சக்தியைக் கொண்டுள்ளது, சிலசமயங்களில் இந்த அன்பே இவர்களின் பார்வையை மறைத்து விடுகிறது. இருப்பினும் அனைவரும் வாழக்கையில் நண்பராக கண்டிப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய நபர் கன்னி ராசிக்காரர் ஆவார்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் மிகச்சிறந்த குணம் சுய முன்னேற்றம் ஆகும். துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்களின் சுயமுன்னேற்றத்திற்கான வழிகளை தேடுவார்கள். இவர்கள் அனைத்தையும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அவர்கள் வெளிப்படையாக போட்டியிடாவிட்டாலும், அவர்கள் முன்னேறிச் செல்வதற்கான வழியைத் தேடுவார்கள் பெரும்பாலும், அவ்வாறு செய்வதில் வெற்றியும் பெறுவார்கள். அவர்கள் தான் தங்கள் வேலையில் சிறந்து விளங்குகிறார்கள், ஆனாலும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. மேலும் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் மிகசிறந்த குணம் அவர்களின் படைப்பாற்றல் ஆகும். தான் சார்ந்து இருக்கும் கூட்டத்தில் இவர்கள் எப்பொழுதும் தனித்துவத்துடன் இருப்பார்கள். படைப்பாற்றலின் ஒரு சக்தி, ஸ்கார்பியன்ஸ் வழக்கமான மற்றும் சலிப்பைத் தவிர்த்து, எப்போதும் புதிய யோசனைகளை கொண்டுவருவார்கள். இது இவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக அவர்களை ஊக்குவிக்கும், இது இவர்களை சிறந்தவர்களாக மாற்றும்.

தனுசு
இவர்கள் ஒருபோதும் மற்றவர்களை பற்றி முன்கூட்டியே தீர்மானித்து விடமாட்டார்கள். இது அனைவரிடமும் காண முடியாத குணமாகும். எல்லா வகையான மக்களுடனும் அவர்கள் ஒன்றிணைவதால், அவர்களின் சமூக வட்டம் மிகப்பெரியதாக இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இவர்கள் மற்றவர்கள் சோகமாக இருக்கும்போது உதவுவார்கள், அவர்கள் வாழ்க்கையில் மேம்படவும், தனித்துவத்தை அடையவும் ஊக்குவிப்பார்கள்.

மகரம்
ஒருபோதும் காலம்தவறாமல் நினைத்த வேலையை முடிக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இது மிகவும் அரிதான ஒரு குணமாகும். இவர்களை சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களிலும் இவர்களின் பங்கு இருக்கும். இவர்களிடம் அர்ஜுனன் போன்ற அற்புதமான கவனம் இருக்கும், அதனை யாராலும் உடைக்க முடியாது. இந்த கவனம் அவர்களின் பணியில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருக்கும். இந்த திறன் காரணமாக அவர்கள் கார்ப்பரேட் ஏணியில் மிக வேகமாக ஏறுகிறார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இயல்பாகவே இயற்கையை நேசிப்பவராக இருப்பார்கள், இயற்கையை பாதுகாக்க இவர்கள் தங்களால் முயன்ற முயற்சிகளை எப்பொழுதும் செய்ய தயாராக இருப்பார்கள். அவர்கள் இயற்கையான குணப்படுத்துபவர்கள் மற்றும் அவர்களின் ஆளுமையின் இந்த அம்சம் அவர்களின் வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளுக்கும் நீண்டுள்ளது. அவர்கள் உண்மையிலேயே இந்த பூமியை வாழ ஒரு சிறந்த இடமாக ஆக்குகிறார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அற்புதமான தொடர்பாளர்கள். தீர்ப்பை வழங்காமல், உங்களின் கருத்தைக் கேட்கும் ஒருவரைக் கண்டுபிடிப்பது அரிது, ஆனால் மீன ராசிக்காரர்கள் இதனை மிகவும் இலகுவாக செய்கிறார்கள். அவர்கள் உங்கள் பிரச்சினையைக் கேட்பார்கள், நீங்கள் அதைக் கேட்டால் மட்டுமே ஆலோசனைகளை வழங்குவார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் ஊடுருவக்கூடியவர்கள் அல்ல இது அவர்களின் ஆளுமையின் சிறந்த பகுதியாகும்.