சனி பகவானிடம் சிக்கப்போவது யார்? விடுதலை யாருக்கு? தப்பிக்க வழி இதோ

சனி பகவான் வருகிறார் என்றதும் பலரின் மனதில் ஒரு பயம் நெருப்பாக பற்றிக்கொள்ளும் தானே. அவர் இருக்கும் இடமும் பார்க்கும் இடங்களும் அவரின் தாக்கங்களுக்கு ஆளாகின்றன.

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுரை சனி ராசியை விட்டு ராசி இடம் பெயர்வார். அவரின் சனிப்பெயர்ச்சி வரும் ஜனவரி 24 காலை 9.57 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார்கள்.

அன்றைய நாள் அமாவாசை தினமும் கூட.

பொதுவாக சனி பகவான் நீதிமான், தவறு செய்தால் அதற்கான தண்டனையையும் நல்லன செய்தால் அதற்கான நற்பலன்களையும் பாரபட்சமில்லாமல் கொடுப்பவர். கர்மவினைகளுக்கு ஏற்றபடி பலன் கொடுப்பவர்.

சோதனைகள் கொடுத்தாலும் வாழ்க்கையில் வழி நடத்த சிறந்த புத்தி புகட்டும் ஆசிரியர் அவரே. அது தண்டனையல்ல.

யோக ராசிகள்:
இந்த சனிப்பெயர்ச்சியால் நற்பலன்களையும், யோகத்தையும், வளர்ச்சியையும் அடையப்போவது ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீன ராசிக்காரர்கள் தான். உங்களுக்கு விடுதலை கிடைச்சாச்சு.

பரிகார ராசிகள்:
தனுசு, மகரம், கும்ப ராசிக்கார்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்காரர்களுக்கு அர்தாஷ்டம் சனியும் வரப்போகிறது.

மிதுன ராசியினருக்கு அஷ்டம சனியும், கடக ராசிக்கு கண்டச்சனியும் தொடங்குகிறது.

எனவே மேற்சொன்ன பரிகார ராசிக்காரர்கள் சனிபகவானை கண்டு பயப்பட வேண்டாம். நல்லதையே செய்யுங்கள், தான தர்மங்கள் செய்யுங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.

சனிக்கிழமை தோறும் அருகே இருக்கும் ஆலயத்தில் சனிபகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள். முடிந்தவரை சனிக்கிழமை அசைவத்தை தவிர்த்துவிடுங்கள்.

விநாயகரை விடாது பிடித்துக்கொள்ளுங்கள். சனியின் கெடுபலங்கள் குறையும்.

சனிபெயர்ச்சி தினத்தன்று அருகே ஆலயத்தில் யாக பூஜை நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளுங்கள்.

சொல்ல வேண்டிய தமிழ் மந்திரம்
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே..
மங்கலம் பொங்க மனம் வைத்து அருள்வாய்..
சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ..
இன்னருள் தா..
வாழ்க வையகம்.. வாழ்க உயிர்கள்…