முதலையின் பல்லை இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் போதும்.. அதிர்ஷ்டம் உங்களை விட்டு எப்போதும் செல்லாது..!

கிராமங்களில் முந்தைய காலத்தில் மழை காலம் வரும் பொழுது ஆறு, குளம், குட்டைகளில் தவளைகளின் சத்தம் அதிகமாக காணப்படும்.

இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். எனவே கிராம மக்கள் என்ன செய்வார்கள் என்றால் முதலையின் கொழுப்பால் உருவான நெய்யை கொண்டு தீபம் ஏற்றி தவளைகள் இருக்கும் இடங்களில் வைப்பார்கள்.

அந்த தீபம் எரிந்து முடியும் வரை தவளைகள் அமைதியாக இருக்கும். இதேபோல் கிடா ஆடு வளர்ப்பவர்கள் அதன் நெற்றிப்பொட்டில் முதலை கொழுப்பை தேய்த்து விடுவார்கள். இவ்வாறு செய்வதால் கிடா ஆடு பெண் ஆட்டிடம் செல்லாது.

இப்படி, முதலையின் பல் ராசிக்குரியதாக கருதப்படுகிறது. அதில் தெய்வீக சக்தி ஒளிந்துள்ளது பலரும் அறியாத ரகசியமாகும்.

இவ்வாறு இருக்க நீர் ராசியான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் நீரில் வாழும் முதலையின் தெய்வீக சக்தி பொருந்திய பல்லை டாலராகவோ அல்லது மோதிரமாகவோ செய்து அணிந்து கொண்டால் அவர்களுக்கு வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அரணாக நின்று அந்த பல் பாதுகாக்கும்.

எந்த விதமான துஷ்ட சக்திகளும் அவர்களை அணுகாது. கண்திருஷ்டி பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள், வசியம் செய்யும் மந்திரங்கள், மைகள் என்று எதுவும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

அதிக சக்தி வாய்ந்த இந்த முதலை பல்லை அனைவரும் அணிந்து கொள்ள கூடாது.