வைரசை தடுக்க!.. வீட்டுக்குள் செல்லும் முன் கட்டாயம் இதை செய்திடுங்கள்

உலகில் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அடிக்கடி தண்ணீரில் கைகளை கழுவ வேண்டுவது அவசியம்.

நம் சுத்தத்தை பேணிப்பாதுகாத்தாலே பெரும்பாலான நோய்களை தடுத்திடலாம்.

இதற்காக தான் நம் முன்னோர்கள் வீட்டிற்குள் நுழையும் முன்னர் தண்ணீரை கொண்டு முகம், கை, கால்களை கழுவுவார்கள்.

குறிப்பாக அம்மை பாதித்த வீட்டில் இருப்பவர்களை பார்க்க சென்றால் மஞ்சள் கலந்த நீரில் சிறிதளவு வேப்பிலை போட்டு வீட்டின் வாசலில் வைத்திருப்பார்கள்.

இது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி, மஞ்சளும், வேப்பிலையும் பல நோய்களுக்கு மருந்து என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் இதை செய்தால் கிருமிகளை தடுக்கலாம் என்பது மட்டும் நிஜம்.