பிறக்கும் தமிழ் வருட புத்தாண்டில் சனியால் துலாம் ராசிக்கு காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! சனி, குரு சேர்க்கையால் என்ன நடக்கும் தெரியுமா?

சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14ஆம் திகதி 2020, செவ்வாய்கிழமை பிறக்கிறது.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். சார்வரி தமிழ் புத்தாண்டில் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை தரக்கூடிய ஆண்டாகவும் அதிர்ஷ்டங்களை தரக்கூடிய ஆண்டாகவும் அமையப்போகிறது.

கிரகங்களான குரு, சனி, ராகு கேது பெயர்ச்சிகள் சாதமான நிலையில் உள்ளது. மார்கழி மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்
உங்களுக்கு சார்வரி புத்தாண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக உள்ளது. காரணம் சார்வரி புது வருடம் துலாம் லக்னத்தில் பிறக்கிறது.

உங்க ராசிக்கு யோகக்காரகனாக உள்ள சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இது அர்த்தாஷ்டம சனி என்றாலும் அச்சப்பட வேண்டாம். கெடுதல்கள் செய்யமாட்டார் சனிபகவான். நன்மைகளை மட்டுமே செய்வார் என்றாலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சனிபகவான் சில மாதங்கள் பின்னோக்கி வக்ரமடைந்து தனுசு ராசிக்கு செல்கிறார் மீண்டும் மார்கழி மாதத்தில் நேர்கதியில் மகரம் ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமர்வார்.

புதிய பதவிகள் தேடி வரும் சம்பள உயர்வு கிடைக்கும், துலாம் ராசிக்கு சனிபகவான் நன்மைகளை செய்வார். காரணம் சனிபகவான் உங்க ராசியில் உச்சமடைகிறார்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பின்னர் உங்க குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். சிலர் வெளியூர் செல்ல வாய்ப்பு வருகிறது.

அரசு வேலைக்கு எதிர்பார்த்தாலும் தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் பேசும் போது கவனமாக இருங்க. தகவல் தொடர்பு, சாப்ட்வேர் முறையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படலாம்.

குரு தரும் யோகம்
குரு அதிசாரமாக நான்காம் வீட்டில் இருக்கிறார். பின்னர் வக்ரமடைந்து மீண்டும் மூன்றாம் வீட்டிற்கு வருகிறார். நேர்கதியில் மீண்டும் மகரம் ராசிக்கு நவம்பர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

சார்வரி ஆண்டு பங்குனி மாதம் இறுதியில் அதிசாரமாக கும்பம் ராசிக்கு செல்கிறார். குருவின் சஞ்சாரம் 3,4,5ஆம் வீடுகளில் அற்புதமாக அமைந்துள்ளது. செவ்வாய், சனி குரு சேர்க்கையால் வீடு யோகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கலாம்.

எச்சரிக்கை
ராகு கேது பெயர்ச்சி செப்டம்பரில் நிகழ்கிறது. ராகு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கும், கேது பகவான் மூன்றாம் வீட்டில் இருந்து இரண்டாம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

எதற்கும் பயப்படாதீங்க. சின்னச் சின்ன விபத்துக்கள் ஏற்படும் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கணும். வண்டி வாகனங்களில் போகும் போதும் நிதானமாக போங்க.

அப்பாவின் உடல்ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. உங்க உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்க. உடற்பயிற்சி செய்யுங்க. கொழுப்பு, வாய்வு பிரச்சினைகளை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிடாதீங்க.
பெண்கள் பாதுகாப்பில் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் பதிவிட வேண்டாம் அதுவே உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்து விடும். தியானம் செய்யுங்க. மன அழுத்தம் போகும். நல்ல வருமானம் வரும்.

செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். காஞ்சி காமாட்சி அம்மனை கும்பிடுங்க. உடல் ஆரோக்கியம் அதிகரிக்கவும் தடைகள் விலகவும் தன்வந்திரி பகவானை வணங்குங்கள்.