விருச்சிக ராசிக்காரர்கள் இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால்.. அதிர்ஷ்டம் உங்களை விட்டு எப்போதும் போகாதாம்..!

விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வீட்டில் எப்போதும் மண் பாத்திரத்தில் சுத்தமான தேன் அல்லது குங்குமம் வைத்திருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகுமாம்.

விருச்சிக ராசிக்காரர்களாகிய நீங்கள், தினமும் காலையில் எழுந்து பல் துலக்கியதும் சிறிதளவு தேன் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெறுவீர்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் அரச மரத்தை வெட்டக்கூடாது. அதேபோல் முட்செடிகளையும் அகற்றுவது கூடாது. இது உங்களுக்கு தோஷத்தை ஏற்படுத்தும்.

மற்ற கிழமைகளை விட செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருப்பது நல்ல பலன் தருமாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய சிவப்பு நிற கைகுட்டையை பயன்படுத்துவதும், சிவப்பு நிறத்தில் டை அணிவதும் வெற்றியை நோக்கி செல்ல துணை புரியுமாம்.

விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அடுப்பில் பால் காய்ச்சி கொண்டிருக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். காய்ச்சிய பாலை பொங்கி வடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த சன்னியாசிகள், முனிவர்கள் போன்ற மகான்களுக்கு இனிப்பு ரொட்டி தயார் செய்து கொண்டு போய்க் கொடுத்து வரலாம்.

இதனால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறுமாம். விருச்சிக ராசிக்காரர்கள் எந்த பொருட்களையும் எவரிடமும் காசு கொடுக்காமல் இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பணத்திற்கு பதிலாக ஏதாவது ஒரு பொருளை அவர்களிடம் கொடுத்து விடவும்.

தேன், குங்குமம், சிவப்பு ரோஜா இவைகளை செவ்வாய்க்கிழமை அன்று கடலிலோ அல்லது ஓடும் நீர் நிலைகளில் விட்டுவிட்டால் உங்களுக்கு இருக்கும் துரதிர்ஷ்டங்கள் அனைத்தும் அதிர்ஷ்டமாக மாறுமாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் வளம் பெற, செவ்வாய்கிழமைகளில் உங்களுக்கு பிடித்தமான இஷ்ட தெய்வத்திற்கு சிகப்பு நிற பூந்தி தயார் செய்து படைத்து வழிபட்டு வருவதனால் யோகம் பெறலாம்.

தங்களின் உடன்பிறந்தவர்களின் மனைவிகளுடன் மனஸ்தாபம் கொள்ளாமல் இருப்பதே நல்லதாம். சண்டை, சச்சரவுகள் இல்லாமல் சகோதரர்களுடன் இணக்கமாக இருப்பது நல்லது.