மயில் இறகால் சனி தோஷம் நீங்க இதெல்லாம் செய்யுங்கள்.. பலன்களும் பரிகாரமும்..!

தமிழ் கடவுள் முருகனின் வாகனம் மயில், முருக பக்தர்கள் சிலர் தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருப்பர். ஆனால், மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் என பலருக்கு தெரியாது.

மூன்று மயிலிறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயிலிறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்து தோஷம் நீங்கும்.

நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயிலிறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.

மயிலிறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயிலிறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கையறையில் மயிலிறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

மயிலிறகு பரிகாரமாய் மட்டுமல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இதனை வீட்டின் சுவற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

வாஸ்து தோஷங்கள்
வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களைக் கூட மயில் இறகால் நீக்க முடியும். வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு எட்டு மயிலிறகைப் பயன்படுத்த வேண்டும்.

எட்டு மயிலிறகையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு வெள்ளை நிறக் கயிற்றினால் கட்டி பூஜை அறையில், வைத்து ஓம் சோமாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வாருங்கள். வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

சனி தோஷம் நீங்க
சனி தோஷம் நீங்குவதற்காக மயிலிறகை வீட்டில் வைக்கிறீர்கள் என்றால் அதற்கு மூன்று மயிலிறகு தேவை. மூன்று மயில் இறகுகளையும் ஒன்றாகச் சேர்த்து அதை கருப்பு நிற நூல் கயிற்றினால் கட்டிக் கொள்ள வேண்டும். அதை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தினமும் வழிபடுகின்ற பொழுது, ஒரு டம்ளரில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சிறிது பாக்கை போட்டு சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பாக்கு நன்கு ஊறியதும் அந்த தண்ணீரை எடுத்து இந்த மயில் இறகின் மேல் தெளித்துக் கொண்டே, ஓம் சனீஸ்வராய நமஹ என்று தினமும் 21 முறை உச்சரித்து வர வேண்டும்.