முன்னாள் பெண் போராளிக்கு கிளிநொச்சியில் நேர்ந்த கொடுமை! உதவியின்றி துயரம்

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த முன்னாள் பெண் போராளியான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதோடு, அவர் வசித்த வந்த வீடும் உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த முன்னாள் பெண் போராளியின் மூன்று சகோதரர்கள் மாவீரர்கள் என்பதுடன் அவரது , கணவரும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து மரணித்த தனது மூன்று சகோதரர்களில் ஒருவர் வாங்கிய காணியில் வசித்து வந்துள்ளார்.

இந் நிலையில் அரசியல் பின் புலத்தில் தொடர்ச்சியாக குறித்த காணியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு கடும் நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண், எனினும் தான் தொடர்ச்சியாக குறித்த காணியில் வசித்து வந்தேன்.

அவ்வவ்போது மாத்தளையிலிருந்து காணியை இயக்கத்திற்கு விற்பனை செய்துவிட்டு சென்றவர் என ஒருவரை வைத்து தனக்கு கடும் நெருக்கடி கொடுப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று (16) கிளிநொச்சி பொலீஸாரின் ஆதரவுடன் சிலர் நான் குடியிருக்கும் காணிக்குள் நுழைந்து வேலியினை பிரித்து எறிந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த போது தான் எதிர்த்து நின்றபோது தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தனது வீட்டு உடமைகள் வீதியில் எறியப்பட்டுள்ளதுடன் வசித்த வீடும் உடைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினால் எங்கு செல்வேன் என்றே தெரியவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் சில வருடங்களுக்கு முன் நள்ளிரவில் எனது தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்ட உள்ளுர் அரசியல்வாதி ஒருவர் கொத்துரொட்டி கட்டிக்கொண்டு வரட்டா எனக் கேட்ட விடயத்தை தான் அம்பலப்படுத்திய நாள் முதல் நெருக்கடியை சந்தித்து வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸாரின் கவனத்திற்கு தாம் கொண்டு சென்றும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீதரனின் சகா வேழமாலிகிதன் கொத்து கொடுத்து பாய் விரிக்கக் கேட்ட கதை கேளீர்!!!