சனிக்கிழமைகளில் இந்த பொருட்களை மட்டும் யாருக்கும் பரிசாக கொடுத்து விடாதீர்கள்! சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்?

நம்மில் பலரும் நவகிரகங்களில் மற்ற கிரகங்களைக் காட்டிலும் சனி பகவான் என்றாலே அனைவரும் பயப்படக்கூடிய ஒருவராக உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மற்ற கிரகப்பெயர்ச்சியைப் போல் இல்லாமல், மிக நீண்ட காலம் ஒரு ராசியில் அமர்ந்து பலன் (நல்லது அல்லது கெட்ட பலன்) தரக்கூடியவராகச் சனி இருப்பதால் சனி பகவானின் பெயர்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது.

சனி பகவானுக்கு உரிய கிழமை சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் நாம் தானம் கொடுத்தால், அவரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். ஆனால் அதே சமயம் சனி பகவான் சில பொருட்களைப் பரிசாக கொடுத்தால் அருள் கிடைக்காமல் போகலாம் என நம்பப்படுகிறது.

சனிக்கிழமைகளில் எதையெல்லாம் பரிசாக கொடுக்கக் கூடாது என்பதைப் பார்ப்போம்.

சாக்லெட்

சனிக்கிழமையில் சாக்லெட் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இது பரிசாக சாக்லெட்டை பெறும் நபருக்கு மன சீரற்ற நிலையை உருவாக்க வல்லது.

முத்து

சனிக்கிழமைகளில் முத்து பரிசு பொருளாக கொடுத்தல் கூடாது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கத்தரிக்கோல்

கத்திரிக்கோல் கொடுக்க அவரின் நட்பு அல்லது உறவில் விரிசல் ஏற்படலாம். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்படலாம்.

வெள்ளி நகை

வெள்ளி சார்ந்த பொருட்களை பரிசாக கொடுத்தால் பொருளாதார பிரச்னை, சிக்கல் ஏற்படலாம்.

சிவப்பு துணி

சிவப்பு துணியை பரிசாக வழங்கினால் சமூகத்தில் நாம் சில சங்கடங்கள், அவமானங்கள் சந்திக்க நேரிடும்.

மல்லிகை வாசனை திரவியம்

மல்லிகை வாசனை திரவியம் வழங்க பெறுபவருக்கும், வாங்குபவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படலாம்.

சிவப்பு நிற எழுதுகோல்

சிவப்பு எழுதுகோல் கொடுக்க பொருளாதார மந்தம், பிரச்னை ஏற்படலாம்.

உலோக பாத்திரங்கள்

உலோக பாத்திரங்கள் கொடுக்க பொருளாதார பிரச்னை, பொருள் இழப்பு ஏற்படலாம்.

வெள்ளை துணி

பரிசுப் பொருளாக வெள்ளைத்துணி கொடுக்க திருமணத்தடை அல்லது திருமண உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.

சனி ஒரு ராசியில் இருப்பதால் ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம், சரியான நேரம் மற்றும் நீதியை மேம்படுத்துவதற்கான அமைப்பாகும். இவற்றை சரியாக பின்பற்றாதவர்களைச் சனியால் தண்டிக்க முடியும்.