காகத்திற்கு இந்த உணவை வைக்காதீர்கள்? மீறினால் ஆபத்து தான்… சனி பகவான் குறி வைத்து தாக்குவார்

சனிக்கிழமைதோறும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும். சனி பகவானின் வாகனமான காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதம் வைக்கலாம். இதனால் ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் ஒரு ஜீவனுக்கு உணவளித்த மனதிருப்தியும் கிடைக்கும்.

சனி பகவானுக்கு உகந்த உலோகம் இரும்பு என்பதால், சனிக்கிழமை தோறும் இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மரங்களில் வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டும் தான்.ஈஸ்வரனின் அருளைப் பெற்ற சனி பகவானை சந்தோஷப்படுத்த, சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சாற்றி வணங்கலாம்.

பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும். சனி பிரதோஷ வழிபாடு அனைத்திலும் சிறந்தது.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். குறிப்பாக சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதுவும் ஆரோக்கிய ரீதியாக நமது நன்மையைக் கருதி சொல்லப்பட்டது.

அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்வதுடன், உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். இவை நம்மை மனித நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தும்.இதை தானே நியாய தேவதையான சனி பகவானும் நம்மிடம் எதிர்பார்ப்பது.

சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சனி தோஷம் நீங்காது. ஆனால் சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும்.

இனி காகத்திற்கு எந்த உணவை அளிக்கவேண்டும் என்பதை பார்ப்போம்
  • அமாவாசை,திதி போன்ற நாட்களில் மட்டும் காகத்திற்கு உணவு வைக்காமல் தினமும் நாம் சமைக்கும் உணவை காகத்திற்கு வைத்தால் நம் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து நல்வாழ்வு அமையும்.
  • கடன் குறைந்து வருமானம் பெருகும்.
  • மிஞ்சிய உணவுகள்,முந்தைய நாள் சமைத்த உணவுகளை காகத்திற்கு வைத்தால் தோஷம் ஏற்படும்.
  • தினமும் புதிதாக சமைத்த உணவு,அதனுடன் தண்ணீர் சேர்த்து காகத்திற்கு வைத்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
  • எச்சில் படாத உணவு,புதிதாக சமைத்த உணவை காகத்திற்கு வைத்து பின் உணவு உண்டால் துன்பங்கள் விலகி பேரின்ப வாழ்வு கிடைக்கும்.