தாங்க முடியாத தலை வலியால் உயிர் போகின்றதா ? உடனடி நிவாரணம் கிடைக்க இதைச் செய்யுங்கள்……..

தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் ஏற்படும்.

ஒற்றை தலைவலி வந்து, அது 4-7 மணிநேரத்திற்கும் நீடித்திருந்தால், அதிலிருந்து விடுபட மருந்து மாத்திரைகளை எடுப்போம். ஆனால், ஒற்றை தலைவலியை எளிய இயற்கை வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:
காபி
எலுமிச்சை

காபி:
காபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும். மேலும் காபி பித்தப்பையை நன்றாக விரிவடையச் செய்து, பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கும்.

எலுமிச்சை:

எலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.
செய்முறை:
முதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.