ஆட்டிப்படைக்கும் ராகு! பேரழிவை ஏற்படுத்தப் போகும் கேது : இந்த 5 விஷயங்களில் கவனமாக இருந்தால் தீங்கு விளையாது

ராகு கேது பெயர்ச்சி 2020 அண்மையில் நடந்தது. அசுப கிரகமான ராகு கேது கிரகங்கள் பெரும்பாலும் நல்ல பலனைத் தராது என்பார்கள்.

இருப்பினும், நாம் இந்த செயல்பாடுகளில் கவனமாக இருந்தால் நல்ல பலனைப் பெற முடியும் என்பது நிச்சயம்.

ஜோதிடத்தில், ராகு-கேது கிரகங்கள் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த இரண்டு கிரகங்களுக்கும் அவற்றின் சொந்த பலாபலன் கொடுப்பதில்லை. அந்த கிரகங்கள் எந்த இடத்தில் அமர்ந்திருக்கின்றன, ஜாதகத்தில் எந்த கிரகத்துடன் சேர்ந்திருக்கின்றன என்பதற்கு ஏற்ப அவற்றின் பலனை கொடுக்கக் கூடியது.

ஒரு ஜாதகத்தில் நல்ல தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால் அதற்கேற்றார் போல சில நல்ல பலன்கள் கிடைக்கும். அதுவே மோசமான தசா புத்தி நடந்திருந்தால் ராகுவும் கேதுவும் மிகவும் வருத்தப்படுத்த வைக்கும்.

உங்கள் ஜாதகத்திலும் ராகு-கேதுவின் மோசமான பலன் நடக்கவிருக்கிறது என்றால் இந்த 5 விஷயங்களைக் கவனமாக பார்த்துக் கொள்ளலாம்.

முடிவெடுக்கும் முன் கவனம் தேவை

உங்கள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால், எந்த விஷயத்தில் கவனமாக முடிவெடுப்பது அவசியம்.

அவசரத்தால் தவறான முடிவு எடுத்து வருந்துவதை விட மிக சில முறையாவது சிந்தித்து முடிவெடுப்பது அவசியம். அனுபவசாலிகளின் பேச்சிற்கு மரியாதை கொடுக்கலாம். அல்லது ஆலோசனைப் பெறலாம்.

ஜோதிடத்தின் படி, ராகு-கேது கிரகங்கள் மோசமாக இருக்கும் போதெல்லாம். எதிர்மறை சிந்தனை அதிகமாக நிலவக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறை சிந்தனை இருப்பது மட்டுமல்லாமல், எல்லா இடங்களிலும் நல்ல விஷயங்களில் கூட எதிர்மறையை மட்டுமே அவர் காணக்கூடிய மன நிலை இருக்கும்.

எதிர்மறை எண்ணங்கள் மனதில் ஆதிக்கம் செலுத்த விடாமல் இருப்பது அவசியம். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம், உங்கள் இஷ்ட தெய்வங்களின் பெயரை உச்சரிக்கத் தொடங்குங்கள். அல்லது ஆன்மிக புத்தகங்களைப் படியுங்கள். இதைச் செய்வதன் மூலம் ராகு-கேதுவின் தாக்கம் குறைகிறது.

விரக்தியடைவதை தவிர்க்கவும்

ராகுவும் கேதுவும் மோசமாக இருந்தால், வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படக்கூடும். சில நேரங்களில் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கும். அல்லது, வேலை செய்யும் இடத்தில், திடீர் விபத்துக்கள் ஏற்படக்கூடிய மோசமான நிகழ்வுகள் இருக்கும்.

வியாபாரத்திலும் பல போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த விஷயத்தில், புதியதைக் கற்றுக்கொள்ள முயலவும். விரக்தியடைவதற்குப் பதிலாக, பணிகளை சிறந்த முறையில் முடிக்க முயற்சிக்க வேண்டும்.

​சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொதுவாக செரிமான சக்தியும் பாதிக்கக்கூடும். அதனால் அஜீரணம் மற்றும் பிற வயிற்று பிரச்சினைகள் அதிகரிக்கும். பொதுவாக வயிற்றுப் பிரச்சினைகள் இருந்தால், அவர் அசைவம் உள்ளிட்ட கடினமான உணவை தவிர்த்து எளிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், சிறிய வயிற்று பிரச்சினைகள் கடுமையான பிரச்சினைகளை கொடுக்கலாம்.

​நறுமண பொருட்கள்

நறுமண பொருட்கள் ராகு கேது கெடு விளைவுகளிலிருந்து காக்கக் கூடியது. பொதுவாக அனைவரின் வீட்டிலும் சந்தனம் இருக்கும். அதனை தினமும் பயன்படுத்துவது நல்லது.

பாவ கிரகங்களின் விளைவையும் முடக்கக் கூடிய வல்லமை நறுமணப் பொருட்களுக்கு உள்ளன. அதனால் வீட்டில் தினமும் பூஜை, வழிபாடு செய்யும் போது தீப, வாசனை தூபங்களைக் காட்டுவது அவசியம்.

அதுமட்டுமல்லாமல் டியோ அல்லது வாசனை சோப்பு பயன்படுத்தலாம்.