டேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வார்த்தையில் திட்டிய சனம்! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அடித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள்.

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவர, சுரேஷ் எப்பொழுதும் போலவே கொழுத்திப்போட்டு பிரச்சினை உருவாக்குகிறார்.

இந்நிலையில், தற்பொழுது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஏதோ சுரேஷால் சனம் ஷெட்டிக்கு கண்ணில் அடிப்படும் அளவுக்கு பிரச்சினை ஏற்படுத்த, கொதித்தெழுந்த சனம் திட்டுகிறார்.

அதன்பின்னர், பாலாஜியும், சுரேஷையும் உங்களுக்கு மூளை கேட்டுப்போச்சா என்ன என கேட்க மூளையே இல்லை என கூறி செல்கிறார்.

இதனால், மேலும் கோபமடைந்த சனம் கெட்டவார்த்தையில் திட்ட, டேய் நீ வெளியே வாடா இப்போ என மோசமான வார்த்தையில் திட்டுகிறார். ஆனாலும் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத சுரேஷ் நக்கலாக சிரிக்கிறார்.

எப்படியும் இன்றைய நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது என தெரிகிறது.