உங்களை ஆட்டிபடைக்கும் சனி மற்றும் ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் செய்திடுங்க

ஒருவருக்கு இருக்கும் ஜாதகத்தில் சனி தோஷம், ராகு கேது தோஷத்தால் பல பேர், பல பிரச்சனைகளில், இன்றளவும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அப்படி, உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் தொடங்கி விட்டது, சனி பகவானாலும், ராகு கேதுவினாலும் பிரச்சனை வரப்போகிறது என்று தெரிந்தால், அதை நினைத்து பயப்பட வேண்டாம்.

ராகு கேது பிரச்சினையாக இருந்தாலும், சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும், அவர்களிடமிருந்து நாம் தப்பிப் பிழைக்க, அனுமனது பாதங்களைச் சரணடைவது தான் ஒரே வழி.

ஆஞ்சநேயர் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கர்ம வினைகளும், துன்பங்களும் நிச்சயமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.

உங்களுக்கு வாழ்க்கையில் எப்பேர் பட்ட கஷ்டம் இருந்தாலும் பின் சொல்லக்கூடிய அனுமனது மூல மந்திரத்தை தினந்தோறும் ஐந்து முறை உச்சரித்தால் கூட, அபரிமிதமான பலனை நம்மால் பெற முடியும்.

அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம்

குமாரம் ப்ரும்ஹ சாரிணம்

துஷ்ட க்ரஹ வினாசயா

ஹனுமந்த முபாஸ் மஹே!

தீராத துயரங்கள் சீக்கிரமே தீரவேண்டும், என்று காலையில் கண்விழித்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.