குருபெயர்ச்சி பலன்கள் 2020-2021-ல் ரிஷப ராசிக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள்

குரு பகவான் பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும்.

அதன்படி வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார்.

அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதனை எதிர்கொள்ளும் யுக்திகளையும் நீங்கள் சிறப்பாக கையாள வேண்டும்.

சக பணியாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எதிலும் துணிச்சலுடன் போராடுவீர்கள்.

குடும்பத்தில் எப்போதும் போல் சாதாரணமான சூழ்நிலை நிலவினாலும் சிறு சிறு சண்டைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

எனினும் அவைகள் பெரிதாக தெரியப் போவதில்லை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஒற்றுமை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருந்தாலும் போதுமான ஒத்துழைப்பு தர மாட்டார்கள்.

பிள்ளைகள் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள் எனவே எச்சரிக்கை தேவை.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் சிரமமின்றி குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும். பணவரவு தாராளமாக இருக்காது.

ஆனால் உங்களுடைய தேவைக்கு ஏற்றபடி நிச்சயம் தனவரவு திருப்தி தரும் வகையில் அமையும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் இல்லை என்றாலும் கவனமுடன் இருப்பது அவசியம்.

அவ்வப்போது வயிறு தொடர்பான பிரச்சினைகளும், அஜீரணக் கோளாறுகளும் வந்து போக வாய்ப்புகள் உண்டு.

உங்கள் ராசிக்கு குரு பகவானை வேண்டி மஞ்சள் கயிறு காப்பாக கட்டிக் கொள்வதும், கோவில்களுக்கு விளக்கிற்கு எண்ணெய் தானம் செய்வதும் சிறப்பான பலன்களை தரும்.