ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றப்படும் முக்கிய போட்டியாளர்! அதிர்ச்சியில் பார்வையாளர்கள் : தீயாய் பரவும் பரபரப்பு தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி வெளியேற்றப்பட போவதாக தகவல் வைரலாகி வருகின்றது.

இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் அர்ச்சனா, சுசித்ரா என இரண்டு பேர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

அர்ச்சனா இரண்டாவது வாரம் வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

பாலாஜி மீது அடிக்கடி எழும் குற்றச் சாட்டுகள் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது அப்பா அம்மா குடிகாரர்கள்,தனக்கு சாப்பாடு கூட போட மாட்டார்கள் என கதறினார்.

அப்பா நள்ளிரவில் குடிபோதையில் பெல்ட்டால் அடிப்பார். அம்மா குடித்துவிட்டு மட்டையாகிவிடுவார் என்று அள்ளிவிட்டார்.

தற்போது சனம் ஷெட்டி வயதில் மூத்தவர் என்ற போதும் அதையெல்லாம் கேட்காத பாலாஜி, சனம் ஷெட்டியை தாக்குவது போல் எகிறினார்.

இதனை தொடர்ந்து பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாயினர்.

சனம் ஷெட்டியிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பாலாஜியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் பாலாஜி இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.