குருப்பெயர்ச்சி பலன்கள்; குருவின் பார்வையால் அதிர்ஷ்டயோகத்தை பெறும் கன்னி ராசி!

இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்கு 5ம் இடமான மகரத்தில் குரு சஞ்சரிப்பார். ராசிக்கு 5ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் பல வகையில் சுப பலன்கள் ஏற்பட உள்ளன.

குரு பகவான் 9, 5ம் பார்வை சிறப்பு பார்வையும், 7ம் பொது பார்வையும் உண்டு. எந்த ராசிக்கு இந்த இடங்களில் குரு இருக்கிறாரோ மிகச் சிறப்பான யோக பலனைப் பெறலாம்.

அந்த வகையில், குரு பகவான் இதுவரை 4ம் இடத்தில் சஞ்சரித்து வந்தார். இனி 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

இதுவரை இருந்த தேவையற்ற அலைச்சல்கள், மன அழுத்தங்கள், வீண் செலவுகள் என பல வகை பிரச்னைகள் நீங்கி, சகல விதத்திலும் சுப பலன்கள் கிடைக்கும்.

குரு பூர்வ புண்ணிய பஞ்சம ஸ்தானத்தில் இருந்து குரு தனது, 2, 5, 7, 9, 11 ஆகிய சுப பலன்களைத் தரக்கூடிய இடங்களான மீனம், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அளிக்க உள்ளார்.

உறவுகள் சிறக்கும், குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் திருமணம் அல்லது குழந்தைப்பேறு மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும். தந்தை வழி உறவினர்கள் மூலம் நீங்கள் அன்பும், ஆதரவும் பெறுவீர்கள்.

மகிழ்ச்சியான தருணங்கள் இருக்கும். பெரியவர்களின் ஆலோசனை உங்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறைந்து எதிர்பாராத மகிழ்ச்சியும், வாய்ப்புகளும் உண்டாகும்.

பெண்களுக்கு இருந்த உடல் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் அதிலிருந்து மீண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

வாழ்க்கை துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். துணையின் முன்னேற்றத்திற்கு உதவுவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைப்பதோடு அவர்களின் மூலம் சுப செய்திகளும் கிடைக்கும்.

பெண்களுக்கு இருந்த உடல் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தினால் அதிலிருந்து மீண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். வாழ்க்கை துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். துணையின் முன்னேற்றத்திற்கு உதவுவீர்கள்.

சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைப்பதோடு அவர்களின் மூலம் சுப செய்திகளும் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் நினைத்தது போல உங்களின் முன்னேற்றம் அமையும். உங்களின் உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும்.

எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க தாமதமாகலாம். புதிய வேலையில் சேர்பவர்களுக்கு அதில் சிறப்பான எதிர்காலம் இருந்தாலும், அலைச்சல் அதிகமாக இருக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிரிகள் நீங்குவர். உங்களின் முயற்சியும், விடாமுயற்சியும் உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

எதிரிகள், எதிர்ப்புகளில் வெற்றி பெறக்கூடிய சிறப்பான சூழல் நிகழ்வும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களுக்கு பல விதங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

கலைஞர்களுக்கு இருந்த இழுபறியான சூழலும் தடைகளும் நீங்கும். வாய்ப்புக்களில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்ற நிலை உண்டாகும். மறைமுக எதிரிகள் நீங்குவர். உங்களின் திறமைக்கு நல்ல பாராட்டும், பரிசும் கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு சிறப்பான பொருளாதார நிலை இருக்கும். வீடு, மனை வாங்கக் கூடிய சிறப்பான வாய்ப்பு உண்டு. விவசாய நிலங்கள் வாங்குவதற்கும், முதலீடுகளை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்;

வியாழக்கிழமைகளில் சித்தர்கள், மகான்களை வழிபட்டு வாருங்கள். அனைத்து தானங்களிலும் பெரிய தானமாக அன்னதானம் இருப்பதால், ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்யலாம்.