இன்றைய ராசிபலன் 21-03-2018

மேஷம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்ப உறுப்பினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆனால், நண்பர்களின் சந்திப்பு ஆறுதல் தரும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்: பல வகைகளிலும் அனுகூலமான நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் மட்டும் பொறுமை தேவை. எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்யவேண்டி இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பில்லை. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்: அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். சிலருக்கு வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

சிம்மம்: பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். தேவையான பணம் கையில் இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு பிள்ளைகள் வகையில் சங்கடம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனை பலராலும் பாராட்டப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின்போது கூடுதல் கவனமாக இருக்கவும்.

துலாம்: இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகக்கூடும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் பணிந்து வருவார்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தடை தாமதம் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு எடுப்பதில் குடும்பத்தினரின் ஆலோசனை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக சற்றே சோர்வு உண்டாகும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு: இன்று எதிலும் பொறுமை அவசியம். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். ஆனால், கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிப்பது மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

மகரம்: தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கும்பம்: எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள்ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது.

மீனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும். கூடுமானவரை வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்துவிடவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.