வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

முன்பு காலத்தில் நம்முடைய முன்னோர்கள் செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் தரையில் நடந்து உள்ளனர். அப்படி தரையில் நடப்பது மிகவும் நல்லதாம்.

இதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • பொதுவாக வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும். அதேபோல் நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணாமாக உடலில் உள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கும்.
  • பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. எனவே வெறும் காலில் நடப்பது நல்லது.
  • வெறும் காலில் ஓடுவதும், சிறிது நேரம் நடப்பதும் இரத்த ஓட்டத்திற்கும், ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது.
  • வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் முடியும்.
  • கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், அது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும்.
  • வெறும் காலில் நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதனால் இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது.
  • வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றது. அதுவும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறும் காலில் நடத்தால் கண் பார்வை கூர்மையாகும்.